15th September 2017 16:08:50 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் அமைந்துள்ள 58 படைப்பிரிவு மற்றும் 583 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் இராணுவத்தினரால் இரத்தினபுரி பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட அடை மழை காரணமாக பாதைகளில் போக்குவரத்து செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
குரவிட – இரத்தினபுரி,வெவல்வத்த பிரதேசங்களில் செப்டம்பர் மாதம் 9 – 14 ஆம் திகதி வரை இவ் வீதிகளில் உள்ள மரங்கள் மண் புட்டிகள் சரிந்து விழுந்தமையினால் இப் பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டிருந்தது.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களது பணிப்புரைக்கமைய 8 ஆவது ஹெமுனு காலாட் படையினரால் இந்த பாதைகள் துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Authentic Sneakers | NIKE AIR HUARACHE