09th August 2017 14:50:10 Hours
இராணுவ அங்கத்தவர்களது நேர்மறை மனோநிலை மற்றும் மன சுகாதார முன்னேற்றுவதற்கு நடாத்தும் ‘பேரின்ப இராணுவ வாழ்க்கை’ நிகழ்ச்சியின் இன்னொரு கட்டம் (03)ஆம் திகதி வியாழக் கிழமை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 4ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ மகளீர் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு இராணுவ மகளீர் அதிகாரிகள் 08 பேர் உட்பட மகளீர் வீராங்கனைகள் 201பேர் கலந்து கொண்டனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திலினி மதுசங்க மற்றும் ரசிக ஹதகொட ஆரச்சியினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விரிவுரைகள் இடம்பெற்றது. அநுராதபுர வைத்தியசாலையில் வெளியூர் மற்றும் எச்.ஐ.வி முன்னேற்ற பிரிவின் வைத்திய எச்.பீ லலித் பிரியங்கர அவர்களினால் தனியார் சுகாதார மற்றும் சமுதாய நோய் தொடர்பான விரிவுரை இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சி திட்டம் இராணுவ உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில்இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சி திட்டத்தின் இன்னொரு கட்டம் கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை வித்தியாலய பிரதான கேட்போர் கூடத்தில் உளவியல் நிபுணர் கேர்ணல் ஆர்.எம்.எம். மொணராகல மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ரசிக ஹதகொட ஆரச்சி அவர்களினால் பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் பெற்றேர்களுக்கு இந்த விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
jordan release date | Nike nike dunk high supreme polka dot background , Gov