12th June 2017 14:34:24 Hours
இலங்கை கடற்படையின் அழைப்பை ஏற்று எமது நாட்டிற்கு பாகிஸ்தான் கடற்படை தளபதி அத்மிரால் மொஹமட் சகாஉல்லா NI(M), விஜயத்தை மேற்கொண்டார். இன்று (12) ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பின் பிரகாரம் இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படை தளபதியை இராணுவ நிறைவேற்று பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றார். பின்பு விஜயபாகு காலாட் படை அணியினரால் பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இராணுவ செயலாளர் காரியாலயத்திற்கு சென்று பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை இராணுவ தளபதியை சந்தித்தார். பின்பு இராணுவ தளபதியினால் பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கு இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, பிரதான பதவி நிலை அதிகாரி மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை அறிமுகம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது இராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கு இடையில் இராணுவ இராஜ தந்திரங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் கை மாறும் நிகழ்வும் இடம்பெற்றது.
பாகிஸ்தான் கடற்படை தளபதி அத்மிரால் மொஹமட் சகாஉல்லா 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அத்மிரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி பாகிஸ்தான் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
Authentic Nike Sneakers | Air Jordan Release Dates 2020